பண்டை காலத்தில் செங்குந்தர் புகழ் சேர்த்த விருத்தம்
பூலோக கைலாச மைசூர் தானாவதி
புனித சீரங்க பட்டணம்
புகழிலா ரிதிசாலி தலையாய் மதிக்கின்ற
புகழும் அப்பாச்சிராயர்
நன்று நன்றே புகழ!
மேலான வெங்கிட்ட ராயருட காரணிக்கு மெதுவாய் புகழ் சோழனும் மெய்ஞான தேரின் மேலேறியே விதியில் பவனி வந்து நாலா புரத்திலும் நம்ம செங்குந்தமென்று நல்ல பரனேறிய வீரசெங்குந்தமாய் நாகலோகத்திலேறி..... குலவையிட்டுக் கொண்டு புறங்கையினால் ஆயுதமெடுத்து கல்லினால் அணியிட்ட தேரின்மேலேறியே இடசாரி வலசாரி வந்து அம்மன், சத்தமிடும் சேகண்டி வீரப்புலிக்கொடி அரசிலைப்பாவாடையும்
நீர்பெற்ற காலத்தில் எங்களுக்கோர் சோதனை வருவதுண்டோ
லட்சிய அண்ணாமலை முத்துகுமாரனே
கனக லட்சுமி மார்பனே!
வீரமகன் அலகு குத்தி வருவதை அம்மன் மக்களோடு
வீதியில் வந்து காணும் ஸ்ரீக விருத்தம்
வீரசூரமாரி பரமேஸ்வரி
மெஞ்ஞான கொண்டத்து அழகாபுரி
உமதுடைய திருநாளிலே எமையுமது கடலாடி
வருகிறோம் வருகிறோம் என்று சொல்லி
கூடிய ஜனத்துடன் கொண்டத்து மாகாளி
கொடுத்ததொரு மாலை வாங்கி
ஆரவாரத்துடன் கோர கம்பீரமாய்
ஆக்கிரமாய் தூக்கியுடலை
ஆதியின் முதுகிலே கொக்கிகளை ஏறிட்டு
அண்டஅதரத்திலே நின்று
வீரபாகு தேவரும் சுடலாடி வருகிறானென்று அம்மன்
வீதியிலே பவனிவந்து
மேதைப்பரமேஸ்வரி ஆலயம் பதிவளரும்
வீசிவரும் பஞ்சவர்ணம்
கோதையம்பதிவளரும் செங்குந்த முதலிமார்
கொண்டாடி வந்த விருது
குடிவரவு சீர் கொண்ட அண்ட பகிரண்டமும்
சொற்சிறை படைத்த பெரியோர்
சூரபத்மனையும் வல்லானையும் வென்று
பொற்குவை பெற்ற பெரியோர்
பழயகுலச் செயல் காமாட்சியம்மனின்
பாதத்தில் வந்த பெரியோர்
பாவலருக்கே சிரசு சிம்மாதனமாக
பண்போடு கொடுத்த பெரியோர்
பழதமிழ் புலவருக்கு கலிதீரவே செய்ணம்
மழைபோல் செரிந்த பெரியோர்
மாநிலம் தன்னிலே அபிமானங்களைக்காக்க
வெரு வலிமையது பெற்ற பெரியோர்
முடிபெற்ற தவரத்ன கிரீடம் பொருத்தவே
முருகதுணையான பெரியோர்
முத்தமிழ் துலங்கி வரும் மூவேந்தர் நாட்டிலே
முனைவீர செங்குத்தமே!
அருணகிரிநாத செங்குந்தர் விருத்தம்
சேவூர் சித்தர் முத்துக்குமரர் செங்குந்தர் விருத்தம் -
பூலோக தேவேந்திரன் மைசூர் குலாதிபதி புனித சீரங்கபட்டனம் போரில் விடாத சுவாமி தளவாய் மதிக்கவரும் புகழும் அப்பாச்சி ராயரும் மேலான வெங்கிட்டராயரும் அவுதவுது எனப்புகழவே வட்டமிகு தேசிகர் மாவுத்தரு கண்டு மகிழ
வாய்பாண தவளைமலை வேலனும் வேலேந்தி மயிலேறி அருகில் வந்து நிற்க வீர செங்குந்தரும் நாலாவகைப் பேரும் நன்று நன்று எனப்புகழ சேவூரில் நல்ல பரண் ஏறியே குலவையிட்டுக் கொண்டு நாகலோகத்தில் ஏறியே சீரா குபேர அண்ணாமலைமைந்தன் செல்வ முத்துக்குமரன் செங்கீரையாடியருளே சித்திரமன்மதரூப முத்துக்குமார செங்கீரையாடியருளே!
சேவூர் சித்தர் முத்துக்குமரர் செங்குந்தர் நவகண்டம் தந்தகாலம்
நானிலம் தன்னிலே கலியுக சகாப்தம் நாலாயிரத்து எண்ணூற்று நாற்பத்திரண்டன் மேல் வந்த துந்துபி வருசம் நல்ல மார்கழித் திங்களில் ஆன முன்றாம் தேதி சுக்கிலபட்சமும் , அதி கீர்த்தியுடன் அன்பான புனர்பூச நட்சத்திரமும் அழகு பெறும் சுபதினத்தில் வானவர்கள் சிறை மீட்க கந்தர் துணையாம் வீரவாகு முதலான ஒன்பது பேரும் வலியழியச் சூரரை வென்று கச்சியில் அன்னாமலை மைந்தன் செல்வமுத்துக் குமரன் செய்ய பூம்பரணேறிற் தீரமாய்க் கழுத்தவருதான் பாய்ச்சி சிவலோகம் ஏகினாரே (காலம்கி. பி, 1141)
பூமேவு செங்கடம்பு பெறுமணி மார்பணை புத்தேழ் கணங்கள் சூழ மயிலேறி உலகமே வலம்வந்த போதனை குருநாதனை, காமேவு சக்திமங்கையின்மேவு முரகளனை கந்தனை சம்பந்தனைக் ககனமுகடனவு வனர்தவளமலை வேலனை காங்கேயனை யாம் பணிவோம்
மதமேவு கச்சிவரும் காமாட்சியம்மன் முன் செய்ய கருமாரி பாய்ந்த செங்குத்த குலதிலகனான அண்ணாமலை மைந்தன் செல்வ முத்துக்குமரன் மதினுலவு சோலை சேர் சேவை நகர்நன்னில் செய்ய பரணேறி தீரமாய்க ! கழுத்தலகு பாய்ச்சிச் சிவலோகம் ஏகினாரே
60 அடி செய்யுள் செங்குந்தர் விருத்தம்
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் விருத்தம்
